tamilnadu

img

திருப்பதியில் திருமணம்: 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்

திருமலை, அக்.20- திருப்பதி தேவஸ்தான மண்ட பங்களில் திருமணம் செய்வோர் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.  திருப்பதியில் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூ ட் டத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான விடுதிகளில் அறை கள் கிடைக்கவில்லை என்றால் திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்சில் தங்கி ஓய்வெ டுக்கலாம். அங்கு விடுதிகளை போல் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. திரு மலையில் கவுஸ்தபம், மங்களம் பாய் காட்டேஜ் நம்பர்-34, மத்திய வரவேற்பு மையம், விருந்தினர் பங்களா விடுதி ஆகியவற்றில் அறைகள் ஒதுக்கீடு செய்வது சுவைப் கருவி மூலமாக மேற் கொள்ளப்படும்.

திருமலையில் பத்மாவதி விருந்தினர் மாளிகை, மங்களம் பாய் காட்டேஜ், விருந்தினர் பங்களா விடுதி, சப்தகிரி சூரா புரம் தோட்டம், ராம்பகீதா ஆகிய விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யும் பக்தர்கள் தங்களின் கிரெ டிட் கார்டுகளை பயன்படுத்தி அறையை பெற்று கொள்ளலாம். திருமலையில் சாதாரண பக் தர்கள் திருமணம் செய்து கொள்ள சங்கு மிட்டா காட்டேஜில் 6 திரு மண மண்டபங்கள், ஆழ்வார் டேங் காட்டேஜில் ஒரு திருமண மண்ட பம், விருந்தினர் பங்களா விடுதி யில் 3 திருமண மண்டபங்கள் உள் ளன. அதில் 90 நாட்களுக்கு முன்பே மணமகன், மணமகள் மற்றும் இருவரின் பெற்றோர் ஆகி யோர் நேரில் வந்து முன்பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். ஆழ்வார் டேங் காட்டேஜில் உள்ள திருமண மண்டபத்துக்கு ரூ.500 கட்டணமும், விருந்தினர் பங்களா விடுதியில் உள்ள திரு மண மண்டபத்துக்கு ரூ.200 கட்ட ணமும் வசூல் செய்யப்படுகிறது. தேவஸ்தான திருமண மண்ட பங்களில் திருமணம் செய்வோர் கண்டிப்பாக இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். வேற்று மதத்தினர் திருமலை- திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபங்களில் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றார்.