புதுச்சேரி, ஜூலை 15-. 5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தை களுக்கான அறிவு புத்தாக்க பயிற்சி அளிப்பது, பல் நோக்கு கலைநிகழ்ச்சி கற்றுத் தருவது, வாசிப்பை நேசிப்பது போன்ற பயிற்சி அளிக்கும் வகையில் குழந் தைகளுக்கான சங்கம் புதுச்சேரியில் துவங்கப் பட்டுள்ளது. கேரளாவில் உள்ளதைப் போல் புதுச்சேரி மண்ணா டிப்பட்டு கொம்யூன் சிலுக் காரிப்பாளையத்தில் நடை பெற்ற சங்க துவக்கவிழா விற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செயலா ளர், பாவேந்தர் பாரதிதாசன் அரசுப் பள்ளியின் பெற்றோர் சங்கத் தலைவருமான இரகு.அன்புமணி தலைமை தாங்கினார். தமுஎகசவின் மாநிலக்குழு உறுப்பினர் மலர்விழி குழந்தைக ளுக்கான புத்தாக்க பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். கிராமிய பாடகர் மணிமேகலை, இந்திய மாணவர் சங்கத்தின் மாநி லக்குழு உறுப்பினர் செம்ம லர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிர தேசச் செயலாளர் சரவ ணன், உலகநாதன், துரை, அப்பகுதியில் உள்ள குழந்தைகள், பெற்றோர் கள் திரளாக கலந்து கொண்ட னர். மாதம் மற்றும் கடைசி வாரம் ஞாயிற்றுக்கிழமை களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.