tamilnadu

img

லாஸ்பேட்டையில் சமத்துவப் பொங்கல் விழா

புதுச்சேரி,ஜன.16- தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் பண்டி கையையொட்டி, புதுவை  லாஸ்பேட்டையில் மரியம் மிர்சகாணி அறிவியல் மன்றம் மற்றும் வீரப்பேரரசி வேலுநாச்சியார் உரிமை மீட்பு இயக்கம், ஜெயதுர்கா பன்முகத் திறன் மேம்பாட்டு மையம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சமத்துவப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மரக்கன்று நடுதல், கிரா மியப் பாடல்கள் போட்டி, கோலப் போட்டி, நொண்டி  மற்றும் இசை நாற்காலி  உட்பட பல வகையான  பாரம்பரிய விளையாட்டு களுடன் பொங்கல் வைத்து கொண்டாட்டம் நடைபெற்றது. விளை யாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப் பாளர்களாக அய்யனார், சகாதேவன், சரவணன் ஆகியோர் பங்கேற்று பல்வேறு போட்டி களை நடத்தினர். தொடர்ந்து நடை பெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சி யில் வீரப்பேரரசி வேலு நாச்சியார் உரிமை மீட்பு  இயக்க நிறுவனர் மணி மேகலை வரவேற்றார். நிர்வாகி லலிதா நோக்க உரை யாற்றினார். சமூக சேவகர்  தமிழ்வேந்தன், டாக்டர் குண சேகர், லதா சந்துரு, ரிஷி  மகேசு, தாரேஷ் அறக்கட்  டளை புதுவை குமார், அறி வியல் மன்ற நிர்வாகி அருண் நாகலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகி ஜெயந்தி செய்து இருந்தார்.

;