ஊரடங்கு தளர்வுகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாயன்று வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு முந்தைய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் நீடித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் பொருட்களின் மாநிலங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்குள் செல்வதற்கு எந்த தடையும் இருக்காது. இதற்காக, தனி அனுமதி தேவையில்லை. தொடர்ந்து நவம்பர் 30 வரை மண்டலங்களுக்கு இடையேயான கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் உள்ளூர் கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சகத்துடன் கலந்து கொள்ளாமல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது.
ரயில் சேவைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், விடுதிகளை, மத வழிபாட்டு தலங்கள், யோகா மற்றும் பயிற்சி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்கு, பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவை திறக்கப்படுவது குறித்து மாநிலங்கள் முடிவு செய்யலாம் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.