புதுச்சேரி, ஜூலை 18- உயர்கல்வி பயில இல வசமாக இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் வசதி துவக்கப்பட்டது. இந்திய மாணவர் சங் கம், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் பாகூர் நெட்டப் பாக்கம் கொம்யூன் கமிட்டி சார்பில் ஏழை எளிய மாண வர்கள் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி படிக்க இலவசமாக இணைய வழி மூலம் விண்ணப்பம் பதிவு செய்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாகூர் சரஸ்வதி நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் துவங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்கச் செயலாளர் கௌசிக் தலைமை தாங்கி னார். வாலிபர் சங்க முன் னாள் பிரதேச தலைவர் தமிழ்ச்செல்வன் இணைய வழி பதிவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்வியா ளர் நா.சண்முகம், மாண வர் சங்க செயலாளர் மணி யன், வாலிபர் சங்க பிரதேச செயலாளர் சரவணன், நிர் வாகிகள் மேடே, மணி பாலன், கலைமாறன், இனி யன், சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.