புதுச்சேரி, ஏப்.14-
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள தெருவோரங்க ளில் வசிப்பவர்களுக்கு வருவாய் துறையினர் முடிதிருத்தம் செய்து மருத்துவ உதவிகளை வழங்கினர்.
புதுச்சேரியில் கொரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
புதுச்சேரியில் கொரோனா பாதித்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி யில் தெருவோரங்களில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்டவர்களை அரசு சமூதாய நலகூடங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் அமைத்து அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நகரின் மையத்தில் வ.உ.சி அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட் டுள்ள சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை 50க்கும் மேற்பட்டவர்களுக்கு வருவாய் துறை சார்பில் முடி திருத்தம், சவரன் போன்ற வைகள் செய்யப்பட்டன. அவர்களை சுத்தம் செய்து அவர்களுக்கு தேவையான உடைகள், உணவு உள்ளிட்டவைகளை வழங்கினர். மேலும் மருத்துவர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்து உதவிகளும் வழங்கப்பட்டன.
கொரோனா தாக்கம் முதியோருக்கு அறிவுறுத்தல்கள்
கொரோனா தாக்கத்தை யொட்டி முதியோருக்கான அறிவுறுத்தல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கொரொனா அறிகுறிகள் இருப்பவர்கள் அருகில் செல்லக் கூடாது, கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லக் கூடாது, வெறும் கையால் மூடிக்கொண்டு இருமவோ, தும்மவோ கூடாது, சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும்.
வழக்கமான மருத்துவ சோதனைகளுக்கு மருத்துவமனைகளுக்கு செல்லக் கூடாது. தனிமையை எதிர்கொள்ள புகையிலை, மது உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது.