tamilnadu

ஜனவரி 8 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் திட்ட அமலாக்க முகமை ஊழியர்கள் பங்கேற்பு

புதுச்சேரி, ஜன. 5- ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தப் போராட்டத்  தில் புதுச்சேரி திட்ட அம லாக்க முகமை ஊழியர்கள் பங்கேற்பது என முடிவு செய்துள்ளனர். இது குறித்து புதுச்சேரி திட்ட அமலாக்க முகமை ஊழியர் சங்கத்தின் செய லாளர் வி.சிவமதன் வெளி யிட்டுள்ள அறிக்கை வரு மாறு:- புதுச்சேரி திட்ட அமலாக்க முகமையில் பணி புரியும் தொழில்நுட்ப உதவி யாளர்கள் மற்றும் மஸ்தூர்க ளுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்கு வது போல் சிஎல், ஈஎல், எம்எல், மருத்துவ விடுப்புதர வேண்டும், இஎஸ்ஐ, பிஎப் போன்றவற்றை பிடித்தம் செய்ய வேண்டும், ஊழியர்க ளுக்கு பணிபாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்சம் மேளனத்தின் அறைகூவலுக்கு இணங்க ஜனவரி 8 ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் திட்டஅமலாக்க முகமை ஊழியர் சங்கம் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

;