புதுச்சேரி, ஜூன் 9- புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் தடைசெய்யப் பட்ட போதைப் பொருட்களை கைதிகள் பயன்படுத்துவதாக கிடைத்த தக வலின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கைதிகளிடமிருந்து 4 செல்போன்கள், செல்போன் சார்ஜர்கள், பேட்டரி கள், ஹெட்போன்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.