புதுச்சேரி, மார்ச் 23- எலும்பு முறிவு, கண் சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ள்ளதாக ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தெரி வித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி அரசின் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவின் படி, ஜிப்மர் மருத்துவமனையில் தோல், எலும்பு முறிவு, கண், உடற்பயிற்சி சிகிச்சை, உளவியல், மற்றும் பல்மருத்துவத் துறைகளின் வெளிப்புற சிகிச்சைகள் மார்ச் 23 திங்களன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. எனவே ஜிப்மருக்கு வரும் மற்ற அனைத்து நோயாளி களும் அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இடத்தில் பரிசோதித்த பின் குறிப்பிட்ட இடங்களுக்குஅனுப்பி வைக்கப்படுவர். மேலும் நோயாளிகளுடன் வருபவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும். ஜிப்மர் குடியிருப்பு வளாகம், மாணவர் விடுதியிலும் பொது மக்களின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதன்படி ஜிப்மர் குடியிருப்பு வாசிகள் மற்றும் மாணவர்கள் விடுதியில் தங்கியிருப்ப வர்கள் அல்லாதவர்கள் ஜிப்மருக்குள் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டிற்காக வருவதற்கு தடைவிதிக்கப் படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.