tamilnadu

img

காஷ்மீர் மக்கள் இருண்ட காலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் புதுச்சேரியில் முன்னாள் நீதிபதி கே.சந்தரு பேச்சு

புதுச்சேரி,செப். 14 - புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கம் சார்பில் ‘காஷ்மீர் மக்களின் உரிமை’என்ற தலைப்பில் சிறப்பு  கருத்தரங்கம் அரசு ஊழியர் சம்மேள னம் கவுரவத் தலைவர்சி.எச்.பால மோகனன் தலைமையில் நடை பெற்றது. இந்த கருத்தரங்கில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கலந்து கொண்டு பேசிய தாவது:- புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருக்கிறது. இங்குள்ள ஆளு நருக்கும், முதல்வருக்கும் யார் பெரியவர் என்பதில் மோதல் இருந்து வருகிறது. இதனைதவிர்க்க வேண்டும் என்றால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகி றோம். இப்படி மாநில அந்தஸ்து கேட்கின்ற வேளையில், ஒரு மாநிலத்தையே யூனியன் பிரதேச மாக மாற்றுகின்றனர். அவர்களுக்கு மக்கள், பகுதி, சமயம் முக்கியமல்ல. அவர்கள் அதிகாரபங்கீடாகத்தான் பிரதேசங்களை பார்க்கின்றனர். யூனியன் பிரேதசத்துக்கு என்று இங்கு சட்டப்பேரவை இருக்கிறது. ஆனால் யூனியன் பிரதேசம் என்று சொல்லக்கூடிய லடாக் மாநிலத்தில் சட்டப்பேரவை இல்லாத சூழலை உருவாக்கிவிட்டனர்.  ராணுவத்தை வைத்து ஆட்சி செய்கின்றனர். காஷ்மீரில் உள்ளூர் போலீஸார் 65 ஆயிரம் பேர். ஆனால் ராணுவத்தினர் 6.5 லட்சம் பேர் உள்ளனர். இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்ட பிறகு ராணு வத்தின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. அப்படி ஒரு மாநிலம் இன்றைக்கு நிர்வகிக்கப்படு கிறது என்பது வெட்கக்கேடு. 52 நாடுகள் இதை கண்டித்துள்ளன. மனித உரிமையை நிலைநாட்டுங்கள், மக்களை சுதந்திரமாக நடக்க விடுங்கள் என்கின்றனர். காஷ்மீரில் தலைவர்களை சிறை வைத்துள்ளனர். மக்கள் வெளியே வரமுடியவில்லை.இன்றைக்கு அறிவியல் பாதையில் நாம் முன்னேறி டிவி, செல்போன், கம்ப்யூட்டர்வைத்துள்ளோம். ஆனால் அங்கு ஒரு இருண்ட காலத்துக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தனது தாயை பார்க்க மகள் உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டு பார்க்க வேண்டிய அவலம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே தான் காஷ்மீர் மாநில பிரச்சனை ஒட்டு மொத்த இந்திய நாட்டு மக்கள் பிரச்சனை இதனை நாம் மக்கள் மத்தியில் எடுத்து செல்ல வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக ‘ரோஜாக்களின் கண்ணீர் துடைக்க’ என்ற தலைப்பில் சிறு பிரசுரத்தை நீதிபதி கே.சந்துரு வெளியிட்டார்.  இந்நிகழ்ச்சியில் சமூக நல்லிணக்கஒருங்கிணைப்பாளர்கள்  கல்வியாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி, தமுஎகச மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன், பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கொளஞ்சியப்பன், முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ, சிபிஎம் பிரதேச செயலாளர்  ராஜாங்கம், சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் தனராமன், மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன், திராவிடர் கழகத் தலைவர்  சிவ. வீரமணி, மனித நேய மக்கள்கட்சி நிர்வாகி பஷீர் அகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.