புதுச்சேரி, ஆக. 4- புதுச்சேரியில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி இல்லாமல் தட்டுபாடு நிலவுகிறது. புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கதிர்காமத்தில் உள்ள புதுச்சேரி அரசின் மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தனி பிரிவு ஏற்படுத்தி சிசிக்சை அளிக்கப்படு கிறது. கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப் பட்ட பொதுமுடக்கத்தின் போது வெறும் 3 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டி ருந்தனர். அதைத் தொடர்ந்து 50 நாட்களாக தொற்று எண்ணிக்கை கட்டுபாட்டிலேயே இருந்தது. மத்திய மாநில அரசுகளின் பொது முடக்க தளர்வுகளால் தொற்று அதிக ரிக்கத் தொடங்கியது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை 42,352 பேருக்கு பரிசோதனை செய்ததில் 4,146 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை 57 பேர் உயிரிழந்தனர். 2,537 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி யுள்ளனர் என்றாலும், அவர்களும் தொடர்ந்து காண்கானிக்கப்பட்டு வருகிறார்கள். தற் போது 1,552 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எண்ணிக்கை அதிகரிப்பு தற்போது தினசரி சராசரியாக 150 பேர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இந்தமாத இறுதியில் 6 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்தவ வல்லு னர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுப வர்களுக்கு போதுமான படுக்கைகள், வேண்டிலேட்டர் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளன. எனவே தற்போது கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரியில் உள்ள 700 படுக்கை வசதி மற்றும் ஒரு சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டி ருப்பது போதுமானதாகவும், நோயை கட்டு படுத்துவதற்கும் ஏதுவாக இருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் புதுச்சேரி அரசிடம் கூறி வருகின்றன. எனவே உடனடியாக 5 தனி யார் மருத்துவக் கல்லூரிகளையும் அரசின் கட்டுபாட்டில் கொண்டு வந்து கொரோனா நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை அளிக்கவும், அதேபோல் பள்ளிகள், மாண வர் விடுதிகள் ஆகியவற்றையும் தற்காலிக மருத்துவனையாக மாற்றி தொற்றில் இருந்து மக்களை முழுமையாக பாதுக்காக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது.