tamilnadu

img

தீக்கதிர் சந்தா வழங்கும் விழா

புதுச்சேரி,டிச.1- புதுச்சேரியில் தீக்கதிர் சந்தாக்கள் வழங்கும் விழா   மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரச் செயலாளர் ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். கட்சியின் மூத்த தலைவர் தா.முருகன் துவக்க உரையாற்றினார்.  மத்தியக்குழு உறுப்பி னர் சுதாசுந்தரராமன் பேசுகை யில்,“ கார்ப்பரேட் கையில் சென்றுள்ள ஊடகங்களுக்கு மத்தியில் தீக்கதிரின் தேவையை உணர்ந்து எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்” என்றார். “அரசியல் களத்தில் தொடர்ந்து போராடி வருபவர்களுக்கு உற்ற தோழனாக விளங்கும் தீக்கதிரை வளர்த்தெடுக்க வேண்டும்  என்று தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகநயினார் கேட்டுக் கொண்டார்.  புதுச்சேரி பிரதேசச் செய லாளர் ஆர்.ராஜாங்கம், தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள் ஆகியோர் சந்தா வழங்கியவர்களை வாழ்த்திப் பேசினர்.  முன்னதாக பிர தேசக்குழுஉறுப்பினர் கலிய மூர்த்தி வரவேற்றார்.  இடைக்குழு செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், அன்பு மணி,  மதிவாணன், கொளஞ்சியப்பன், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், பிரபுராஜ் உள்ளிட்ட திரளானோர் விழாவில் கலந்து கொண்ட னர். புதுச்சேரி முழுவதும் திரட்டப்பட்ட  178 தீக்கதிர் சந்தாக்களுக்கான ரூ.2,15, 500க்கான நிதியை, சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் சுதாசுந்தரராமனிடம் வழங்கினர். தீக்கதிர் முகவர்கள் காசிநாதன், குணசேகரன், மணவாளன், நமச்சிவாயம் ஆகியோரது பணிகளை பாராட்டி தலைவர்கள் கதராடை அணிவித்தனர்.