tamilnadu

img

வாட்ஸ்அப் குழுவை பயன்படுத்தி தேர்வில் முறைகேடு - 28 கைபேசிகள் பறிமுதல்

கேரளாவில் பொறியியல் கல்லூரி தேர்வில் வாட்ஸ்அப் குழுக்களை பயன்படுத்தி முறைகேடு நடந்ததாக 28 கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  
கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (கே.டி.யு) அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற்ற துணைத் தேர்வுகளின் போது நாங்கு பொறியியல் கல்லூரிகளில் பதிவான முறைகேடு தொடர்புடைய 28 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு கல்லூரியில் 10 பெரும், மற்றொரு கல்லூரியில் 10 பெரும், மற்றவர்கள் இரு கல்லூரிகளை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளின் நிர்வாகிகள் மற்றும் தேர்வுத்துறை ஆசிரியர்களுடன் கேரளா தொழிற்நுட்ப பல்கலைக்கழகம் (கே.டி.யு) சிண்டிகேட் தேர்வு துணைக்குழு நடத்திய இணைய விசாரணையில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளது. கே.இ.யு துணைவேந்தர் டாக்டர் எம்.எஸ்.ராஜஸ் அவர்களிடம் அறிவுறுத்தலின் பேரில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தேர்வு அறைகளில் கைபேசி தடைசெய்யப்பட்டுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு முன்பு கைப்பேசிகளை வெளியே வைக்குமாறு தேர்வு கண்காணிப்பாளர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், சில மாணவர்கள் ஒரு கைபேசியை வெளியே வைத்து விட்டு மற்றொரு கைபேசியை தேர்வு அறைக்கு எடுத்துச் சென்றுள்ளார். பல்கலைக்கழகத்தின் தேர்வு விதிகளின் படி சட்ட விரோதமாக கைப்பேசிகளை தேர்வு அறைக்கு எடுத்து சென்றவர்கள் அடுத்த மூன்று முறை குறிப்பிட்ட தேர்வை எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சில கல்லூரிகளில் கைப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால்,, உடனடியாக கைப்பேசிகளை திருப்பி கொடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கூறியதாக சில தகவல்களும் வந்தன.

அதே போல, ஒரே பாடத்திற்கு பல வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், சில குழுக்களில் 75 மதிப்பெண்களுக்கான பதில்கள் பகிரப்பட்டுள்ளது. இணையத்தில் பல்வேறு முறைகளில் பகிரப்பட்டிருக்க கூடும். எனவே, மீண்டும் கல்லூரி நிர்வாகம் விசாரிக்க வேண்டும். மேலும், வேறு பாடங்களில் இதே போன்று முறைகேடுகள் நடந்துள்ளதா என சோதனை செய்ய வேண்டும். முறைகேடுகள் பதிவாகியுள்ள 4 கல்லூரிகளில் ஒழுங்கற்றுக் குழு கூட்டத்தை கூட்டி ஐந்து நாட்களில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.