tamilnadu

img

டெல்லி கலவரம் குறித்த குற்றப்பத்திரிக்கை 'சீட்ஷீட்' - பிருந்தா காரத் 

டெல்லி கலவரம் குறித்த அளித்தது குற்றப்பத்திரிக்கை அல்ல. இது ஒரு சீட்ஷீட், உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் கீழ் டெல்லி காவல்துறை மூலம் இந்திய மக்களை ஏமாற்றுகிறார்கள் என சிபிஐஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வியாழனன்று தெரிவித்துள்ளார்.

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் சிபிஐஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தனது பெயரை குற்றப்பத்திரிகையில் டெல்லி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர் என வியாழனன்று கூறியுள்ளார். இது ஒரு குற்றப்பத்திரிக்கை அல்ல, ஏமாற்றுத்தாள் என்றும் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் கீழ் தில்லி காவல்துறை மூலம் இந்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

கபில் மிஸ்ரா போன்ற வகுப்பு வாத வன்முறையில் ஈடுபட்டவர்களை உண்மையில் பொறுப்பானவர்கள் என்றும்  இந்த குற்றப்பத்திரிகையில் கருதப்படுகிறது. மாறாக சிஏஏ க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்தியாவிற்கும், இந்திய அரசியலமைப்பிற்கும் எதிரானவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். எனவே, இந்த குற்றப்பத்திரிக்கை மக்களை ஏமாற்றுகிறது.

காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், சிபிஐ-எம்எல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கவிதா கிருஷ்ணன், மாணவர் ஆர்வலர் காவல்பிரீத் கவுர், விஞ்ஞானி கொவ்ஹர் ராசா மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் கடந்த வாரம் டெல்லி காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அறிக்கைகளில் உள்ளனர். இந்த ஆண்டு பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் குழுக்களுக்கு இடையே நடந்த இந்த வன்முறை, 53 பேரின் மரணத்திற்கு வழிவகுத்தது, மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.