தில்லியில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தில்லியில் ஜாகீர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 11 பேர் காயமடைந்து உள்ளனர்.
இந்த தகவல் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு 5 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். காயமடைந்தோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.