இந்தியா முழுவதும் 45லட்சம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் நாடு முழுவதும் 1200 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்தியா முழுவதும் இதுவரை 5,40,97,975 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 11,63,542 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில்,
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 45 லட்சத்தினை கடந்துள்ளது. கடந்த வாரத்தில் ஒரு நாளில் அதிக அளவிலான கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 96,551 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல 1,209 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 45,62,415 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 76,271 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 9,43,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 35,42,664 பேர் குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது பிரேசிலை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பரிசோதனைகளை பொறுத்த அளவில், இதுவரை 5,40,97,975 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 11,63,542 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.