tamilnadu

img

கிறிஸ்தவர், முஸ்லிம்களுக்கு கட்டாய கருத்தடை செய்வோம்..

புதுதில்லி:

பாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுகிறேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் பெண் சாமியார் பிரக்யா தாக்குர். அவரைத்தான் போபால் தொகுதி வேட்பாளராக பாஜக நிறுத்தியிருக்கிறது.


இந்நிலையில், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கட்டாய கருத்தடை செய்ய வேண்டும் என்று மற்றொரு பெண் சாமியாரான தேவ தாக்குரும் கலவரத்தைத் தூண்டியுள்ளார்.


ஹிந்து மகா சபை தலைவர்களில் ஒருவரான இவர், செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது, “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது இந்துக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது; இதனைத் தடுக்க, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மத்திய அரசு கருத்தடை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், “இந்துக்களின் மக்கள் தொகையை பெருக்க வேண்டும்; உலகிலேயே முதலிடத்தில் இந்துக்களின் மக்கள் தொகை இருக்க வேண்டும்” என்று மூடத்தனமான ஆசையை வெளிப்படுத்தியிருக்கும் தேவ தாக்குர், “நாதுராம் கோட்சேவுக்கு ஹரியானாவில் சிலை வைப்பதற்கு தனது ஆதரவு உண்டு” என்றும் தெரிவித்துள்ளார்.


;