புதுச்சேரி, ஆக. 30- வீட்டு தனிமையில் இருப் பவர்கள் விதிகளை மீறினால் நடவடிக்கை எடுப்படும் என்று புதுச்சேரி ஆட்சியர் அருண் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை திடீரென அதி கரித்து வருகிறது. இதன் காரணமாக வீட்டு தனிமைப் படுத்தலின் கீழ் உள்ள நபர்க ளின் எண்ணிக்கை மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண் ணிக்கை வெகுவாக அதிக ரித்துள்ளன. இவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளி யேறுவதாக புகார்கள் வந் துள்ளன. இது கொரோனா நோய் தொற்று மேலும் பரவுவதற்கான கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. வீட்டு தனிமைப்படுத்த லின் கீழ் இருப்பவர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால் வருவாய்த்துறை, காவல் துறை, சுகாதாரத்துறையினர் கண்காணித்து புகார் பதிவு செய்ய நடவடிக்கை எடுப் பார்கள். எனவே பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 மற்றும் தொற்று நோய் சட்டம் 1897 ஆகியவற்றின் கீழ் மாவட்ட ஆட்சித்துறை நடுவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படை யில் கீழ்கண்ட உத்தரவுகள் நடைமுறைக்கு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.