புதுச்சேரி, ஜூன் 3- பொதுமுடக்க காலத்தில் கல்விக் கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ராகௌடுவை சந்தித்து இந்திய மாணவர் சங்க நிர் வாகிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி யிருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கத் தால் அனைத்து தரப்பு மக்க ளும் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். இந்த கால கட்டத்தில் மக்கள் வேலை இழந்து வருமானம் இழந்து பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனர். இதனை அறிந்து புதுச் சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் தனியார் பள்ளி களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் 3 மாத காலத் திற்கு கல்வி கட்டணம் வசூ லிக்க கூடாது என அறி வுறுத்தியுள்ளார்.
இந்த அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல் ஒரு சில தனியார் பள்ளிகள் நான் காம் பருவ கல்வி கட்ட ணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை நிர்ப்பந்திப் பது தெரிய வருகிறது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக இயக்கப்படாத பேருந்துகளின் கட்ட ணத்தையும் செலுத்துமாறு பெற்றோர்களை கட்டா யப்படுத்துவது கடும் கண்ட னத்திற்குரியது. கடந்த 2017ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர்அலி தலைமையில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்ட ணம் நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்ட ணங்களை வசூலிக்காமல் கூடுதலாகவே வசூலிக்கப் படுகிறது.
தற்போதைய அசா தாரண சூழலில் வாழ்வா தாரத்தை இழந்து நெருக்கடி யில் உள்ள மக்களிடம் கல்விக் கட்டணம் வசூ லிப்பது ஏற்புடையதல்ல. எனவே, கல்வித்துறை உட னடியாக கல்விக் கட்டணம் செலுத்துமாறு நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள் குறித்து பொது மக்கள் மற்றும் பெற்றோர் கள் புகார் அளிக்கும் வகை யில் புதுச்சேரி கல்வித்துறை ஹெல்ப் லைன் எண்களை (உதவி மையம்) வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.