tamilnadu

img

நாராயணசாமி மீது நடவடிக்கை - கிரண்பேடி உத்தரவு

தலையில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்க கூறி கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. காமராஜர் நகர் இடைத்தேர்தலில் மக்கள் நலத்திட்டங்களுக்கு இடையூறாக கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார். தேர்தல் நன்னடத்தை விதி அமலில் இருக்கும்போது ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். ஐகோர்ட் உத்தரவை மீறி செயல்படும் கவர்னர் கிரண்பேடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என நாராயணசாமி தெரிவித்தார். 

இந்நிலையில் காமராஜர் நகர் தொகுதி பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் தலையில் ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனத்தில் சென்றதை கவர்னர் கண்டித்துள்ளார். மேலும் ஐகோர்ட் உத்தரவுகள், சட்டங்கள் மீறப்பட்டுள்ளதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 
 

;