tamilnadu

ரயில்களில் பயணம் செய்ய 4.23 லட்சம் மக்கள் ஆர்வம்

புதுதில்லி, மே 21- ரயில்களில் பயணம் செய்ய 4.23 பேர் முன்பதிவு செய்துள்ள னர். 1.78 லட்சம் டிக்கெட்டுகளை ரயில்வே விற்றுள்ளது. கொரோனா பாதிப்பால் இந் தியா முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி முதல் ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலை யில் நாடு முழுவதும் அதிகமான மக்களைக் கொண்டு செல்வ தற்காக எதிர்வரும் நாட்களில் அதிக ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுமென  மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வியா ழக்கிழமை தெரிவித்தார். இந்தி யாவை இயல்பு நிலைக்குக் கொண்டு செல்ல அதிக ரயில்கள்  விரைவில் அறிவிக்கப்படும். வெள்ளிக்கிழமை முதல் 1.7 லட் சம் பொது சேவை மையங்களில் டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்கும்.  பாஜக தேசிய செய்தித் தொடர் பாளர் சம்பிட் பத்ராவுடனான சந் திப்பில்,  “இந்தியாவை இயல்பு நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்ட தால், அதிகமான ரயில்களை மீண் டும் தொடங்குவதாகவும் வியா ழக்கிழமை வரை 1,600 க்கும் மேற்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில் களை இயக்கியுள்ளதாகவும். 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்துள்ளதாகவும் கோயல் கூறியுள்ளார். வியாழக்கிழமை, 200  ரயில் களுக்கான முன்பதிவு தொடங்கி யது. முதல் மூன்று மணி நேரத் தில் 76 ரயில்களில் 4.23 லட்சம் பய ணிகள் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். 1.78 லட்சம் டிக்கெட் டுகளை ரயில்வே விற்றுள்ளது.