அக்டோபர் 15ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்ததுள்ளது.
அக்டோபர் 15ஆம் தேதி முதல் நீச்சல் குளங்கள், திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
மேலும் திரையரங்குகளில் 50 சதவிகித டிக்கெட்களை மட்டுமே விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது.