tamilnadu

img

புதுச்சேரி: விஷவாயுத் தாக்கி 3 பெண்கள் உயிரிழப்பு

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள புதுநகரில் வீட்டின் கழிவறையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு  முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள புதுநகரில் வீட்டின் கழிவறையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி சிறுமி உட்பட 3 பெண்கள் உயிரிழந்துள்ளார். புதுநகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியான விஷவாயு, அப்பகுதி வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறுவதாக புகார்; வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறும், வீட்டில் இருப்பவர்கள் முகக்கவசம் அணியுமாறும் ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறை அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சமும், 2 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க இரு குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.