tamilnadu

img

புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு ஒமிக்ரான்!  

புதுச்சேரியில் முதல்முறையாக 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 653ஆக உயர்ந்துள்ளது.  இதனால் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. மேலும் அதிக பாதிப்பு நிறைந்த 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனைதொடர்ந்து ஒமிக்ரான் தொற்று பரவாமல் இருக்க, கட்டுப்படுத்தும் விதமாக அடுத்தடுத்து மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை பிறப்பித்து வருகின்றன.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 80 வயது முதியவர் மற்றும் 20 வயது இளைஞர் ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

;