புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் முழுவதும், கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து கொரோனா நோய்த் தொற்று அதிகரித்ததால் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அவ்வப்போது நோய்த்தொற்று குறைந்த நிலையில், கடந்தாண்டு தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாகவே புதுச்சேரியில் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் மீண்டும் மழலையர் பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதி அளித்தது.
அதனடிப்படையில், திங்கள்கிழமை முதல் அரசு மற்றும் தனியார் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.