tamilnadu

img

பாலமோகனுக்கு சிலை திறக்க முடிவு

புதுச்சேரி,செப்.26- புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத் தலைவர் பிரேம தாசன்,பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்தித்த னர். அப்போது, அவர்கள் கூறியதாவது:- புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேள னத்தின் ஸ்தாபக தலை வர்களில் ஒருவரும், முன்னாள் கவுரவத் தலை வருமான சி.எச்.பால மோகனன் கடந்த மே மாதம் காலமானார். தன்ன லம் கருதாமல் அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் மற்றும் புதுச்சேரி விளிம்புநிலை மக்களின் பிரதிநிதியாக வளம் வந்த பாலமோகனின் பிறந்த நாளையொட்டி செப்.30 அன்று அரசு ஊழியர் சம்மேளன வளாகத்தில் அவரது சிலை திறக்கப்படு கிறது. சிஐடியு அகில இந்திய மூத்தத் தலை வர்களில் ஒருவரான ஏ.கே.பத்மநாபன் விழாவில் கலந்துகொண்டு, சி.எச்.பாலமோகனின் வெண்கள சிலையை திறந்து வைக்கிறார்.  அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தலை வர்களில் ஒருவரான எம்.துரைபாண்டியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.செல்வம்,சம்மேளன முன்னாள் தலைவர் நா.சண்முகம் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.  இவ்வாறு அவர் பேசி னார். இச்சந்திப்பின்  போது சம்மேளன நிர்வாகி கள் கீதா, லலிதா, கிரிஸ்தோபர், ஞானசேகர், பாலசுப்பிரமணியன், இளங்கோ, மூத்த தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் உடனிருந்தனர்.

;