tamilnadu

புதுவையில் இன்று விடுதலை நாள் விழா

புதுச்சேரி,அக்.31- புதுச்சேரி விடுதலை நாள் விழாவையொட்டி முதல்வர் நாராயணசாமி கடற்கரை காந்தி சிலை எதிரே நவம்பர் 1 ஆம் தேதி தேசியக் கொடியை ஏற்றி வைக்கி றார். 300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தின்கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், வங்காளத்தில் சந்திர நாகூர் பகுதிகளில் இருந்தது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் 1947 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. புதுச்சேரி பிரதேசம் மட்டும் பிரெஞ்சு ஆட்சியின்கீழ் இருந்து வந்த நிலையில் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பிரெஞ்சு ஆட்சியை எதிர்த்து அன்றை க்கு பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர்கள் தலைமையில் வீரம் செறிந்த போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தின் மூலமாக 1954 நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரி பிரதேசம் விடு தலை பெற்றது. விடுதலை பெற்ற   தினத்தில் புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டு தோறும் கொடியேற்றி தியாகிகளை கவுரவப்படு த்தும் விழா நடைபெற்று வருகிறது.  புதுச்சேரி கடற்கரை காந்திசிலை எதிரே நடைபெறும் விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து விடுதலை நாள் விழா உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து காவல்துறை, பள்ளி  மணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். காரைக்கால், மாஹே, ஏனாமிலும் தேசியக் கொடி யேற்று விழா நடைபெறு கிறது. விடுதலை நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இன்று (நவ. 1) புதுச்சேரி அரசு அலுவலகங்களுக்கு   விடுமுறை அளித்துள்ளது.