புதுச்சேரியின் பாரம்பரியமான ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ் என்கிற ஏ.எப்.டி பஞ்சாலையை அரசு மூடியுள்ளதை கண்டித்து முதலியார்பேட்டையில் சிஐடியு பிரதேச தலைவர் கே.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சீனுவாசன், பிரபுராஜ்,மதிவாணன், ரவிச்சந்திரன், கலியமூர்த்தி உள்ளிட்ட பஞ்சாலை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.