tamilnadu

img

மோடியின் சாயலில் அமைக்கப்பட்ட புத்தாண்டுக்கு எரிக்கப்படும் பொம்மை!

கொச்சி, டிச. 29 - கேரள மாநிலம் கொச்சியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் இறுதி வாரத்தில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் இறுதி வாரத்தில் நடக்கும் இந்த திருவிழாவில் ஏராள மான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம்.  கொச்சினின் பாரம்பரிய மரபு களைப் போற்றும் வகையிலும் குழந்தைகளைக் கவரும் வகையிலும் நடத்தப்படும் இந்த திருவிழாவில், ஆண்டுதோறும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக- ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 அன்று 50 அடி  உயரமுடைய மிகப்பெரிய உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்படும். தீமையை தீயிட்டு எரித்து விட்டோம்; வருமாண்டு நமக்கு வசந்தமே என்று நம்பிக்கையை ஊட்டும் விதமாக இவ்வாறு பொம்மை எரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக திருவிழா நடை பெறும் பகுதியில் மிகப்பெரிய உருவபொம்மை நிறுவப்படும்.  அந்தவகையில் வரும் டிசம்பர் 31 அன்று எரிப்பதற்காக அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட உருவபொம்மை பிரதமர் நரேந்திர மோடியின் சாயலில் இருப்பதாக பாஜக-வினர் குற்றச் சாட்டு எழுப்பியுள்ளனர். பிரம்மாண்ட உருவபொம்மை, பிரதமர் மோடி யின் முகம் மற்றும் உடையை ஒத்திருப்பதாகவும், எனவே, அதனை அகற்ற வேண்டும் எனவும் பாஜகவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  இந்த பிரச்சனையில் காவல்துறை யினரின் தலையீட்டுக்குப் பிறகு, தற்போது மோடி சாயலில் இருக்கும் உருவபொம்மையின் முகத்தை மாற்று வதற்கு விழாக்குழுவினர் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.