tamilnadu

img

5 சிறுமிகள் கூட்டு வன்கொடுமை விவகாரத்தில் 6 பேர் கைது 

புதுச்சேரி அருகே 5 சிறுமிகள் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் 6பேர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோர்க்காடு சாத்தமங்கலம் பகுதியில் வாத்து பண்ணையில், சிவகங்கையை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் சிலர் தங்களது பெண் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர். இதைத்தொடர்ந்து கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் குழந்தைகளும் அங்கே இருந்த வாத்து பண்ணையில்  கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக குடும்ப நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து நேரில் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள்  சிறுமிகளை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர். இதுதொடர்பாக புதுச்சேரி முதுநிலை எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமிகள் கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. 
இதையடுத்து வில்லியனூர் பகுதியை சேர்ந்த கன்னியப்பன், ராஜ்குமார், பசுபதி, ஐயனார், சிவா மற்றும் மூர்த்தி ஆகிய 6 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.