tamilnadu

புதுச்சேரியில் புதிதாக 355 பேருக்கு நோய் தொற்று.... 

புதுச்சேரி:
புதுச்சேரியில் புதிதாக 355 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் செவ்வாயன்று(ஜூன் 15) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,017 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 265, காரைக்கால் - 77, ஏனாம் - 8, மாஹே - 5 என மொத்தம் 355 (3.94 சதவீதம்) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 5 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். காரைக்கால், மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை.

;