புதுச்சேரி, ஆக. 22- புதுச்சேரி பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்தவர் டாக்டர் நிர்மல்குமார். இவரது சொகுசு காரை கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து அவர் ரெட்டியார்பாளையம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் நிர்மல்குமா ரின் சொகுசு காரை திருடிச் சென்றது திருச்சியை சேர்ந்த 2 நபர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் திருச்சிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த ராஜாமணி (எ) பெல்மணி (44), ஜாபர் உசைன் (24) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நிர்மல்குமாரின் காரை திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் சென்னையில் மேலும் 4 சொகுசு கார்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல் துறையினர் கைது செய்து, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு இடங்களில் இருந்து 5 சொகுசு கார்களை பறிமுதல் செய்த னர். இதையடுத்து அவர்கள் புதுவைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு உள்ளனர். பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்கவுள்ளனர்.