புதுச்சேரி,பிப்.12- பாகூர் கொம்யூன் குருவி நத்தம் கிராம பஞ்சாயத் துக்குட்பட்ட பெரியார் நகர் பகுதி மக்களுக்கு இந்த ஆண்டுக்கான 100 நாள் வேலைத் திட்டத்தை இது வரை வழங்காததை கண்டித் தும், உடனடியாக வேலை வழங்கக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பிரதேசத் தலைவர் ஆனந்து தலைமையில் புதுச்சேரி அரியாங்குப்பம் வட்டாரவளர்ச்சி அலுவல கத்தை முற்றுகைப் போராட் டம் நடைபெற்றது. அப்போது போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சித் துறையின் அலுவ லர் மலர் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு நாட்களில் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து போராட் டம் கைவிடப்பட்டது. இதில் செயலாளர் சரவ ணன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் அரிதாஸ், நிர்வாகிகள் சஞ்சய், மணி யன், மேடே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.