tamilnadu

img

காவனூர் கிராமத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

மதுராந்தகம், அக்.1-  காஞ்சிபுரம் மாவட்டம், சூனாம்பேடு ஊராட்சிக்குட்பட்டது காவனூர் கிராமம். இக்கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. காவனூர் கிராமத்தில் 3 குடிதண்ணீர் கிணறுகள், 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இருந்தும் ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் முறையாகக் குடிதண்ணீர் வழங்கப்பட வில்லை என கிராம மக்கள் கூறுகின்ற னர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஒப்பந்ததாரர்களின் சேவகர்கள் போல அதிகாரிகள் பேசுகிறார்கள் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவனூர் பிரதானச்சாலையில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து குழாய் மூலம் குடிதண்ணீர் வழங்கிட வேண்டும், அனைத்து பகுதிக்கும் புதிய பைப்லைன் அமைத்து குடிநீர் வழங்கிட வேண்டும், தெருவிளக்குக ளைச் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று (அக். 1) சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவல கம் முன்பு ஆர்ப்பட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளா எஸ்.நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வாசு தேவன், மாவட்டக்குழு உறுப்பி னர் டி.கிருஷ்ணராஜ், வட்டச் செயலாளா எஸ்.ரவி, வட்டக்குழு உறுப்பினர் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவல ரைச் சந்தித்து மனு கொடுக்க சென்ற னர். அப்போது, அவர் இல்லை. இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது பற்றி தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிபிஎம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.