புதுக்கோட்டை, பிப்.12- எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறு வனம், தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழகம் மற்றும் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி தாவரவியல் துறை இணைந்து அறிவியலில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பற்றிய சர்வதேச தினம் புதுக்கோட்டையில் செவ்வா ய்க்கிழமை நடைபெற்றது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். அவர் பேசும்போது, “பெண்கள் மற்றும் சிறுமிகளை அறிவியலில் ஊக்கப்படுத்துவதற்காக கடந்த 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11 அன்று அறிவியலில் பெண்கள் மேம்பாடு எனும் சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 15 வருடங்களில் உலக அளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளை அறிவியலில் ஈடுபடுத்துவதிலும் ஊக்கப்படுத்துவதிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக அளவில் யுனெஸ்கோ ஆய்வின்படி 30 சதவீதத்திற்கு குறைவான பெண்களே அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். மேலும், குறைந்த சதவீத மான மாணவிகளே அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த உயர் படிப்புகளை யும் ஆராய்ச்சிகளையும் தேர்வு செய்கி றார்கள். பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அறிவியலில் ஆண்களுக்கு இணையாக சாதனை படைப்பார்கள். எனவே பெண்கள் அறிவியலில் அதிகம் பங்கேற்க அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்றார். வம்பன் வோளாண்மை அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.ஆர். லதா சிறப்புரையாற்றினார். மா.மன்னர் கல்லூரி தாவரவியல் துறை தலைவர் பேரா சிரியர் எஸ்.அழகுமணி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் க.சதாசிவம், தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழக இயக்குநர் எஸ்.விஜிக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் மா. மன்னர் கல்லூரி மாணவர்கள், பேராசிரி யர்கள், முன்னதாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள ஒருங்கிணைப்பாளர் டி.விமலா வரவேற்க திட்ட இணை அலுவ லர் கேஸ்.பிரிட்டோ நன்றி கூறினார்.