புதுக்கோட்டை, மார்ச் - பிள்ளைகளுக்கு உபதேசம் செய்யாதீர்கள். அவர்கள் உங்களை விடவும் பெரும் கனவுகளோடு வரு கின்றன்றனர் என்றார் யுவபுரஸ்கர் விருதுபெற்ற எழுத்தாளர் கவிஞர் மனுஷி. புதுக்கோட்டை திருக்கோ கர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற மழலை மாணவர்களுக்கான பட்ட மளிப்பு விழாவில் அவர் பேசியது: மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக சில தியா கங்களை செய்தே ஆகவேண்டும். நீங்கள் வீட்டில் இருக்கும்போது டிவி சீரியல் பார்த்தீர்கள் என்றால் அவர்களும் ஹோம் ஒர்க் நோட்டை விரித்துவைத்துக்கொண்டு டிவி யைத்தான் பார்த்துக் கொண்டிருப் பார்கள். மாறாக நீங்களும் அவர்க ளோடு சேர்ந்து ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள். அவர்க ளும் உற்சாகமாகி படிக்கத் தொடங்கு வார்கள். பெற்றோர் தங்கள் கனவு களையெல்லாம் பிள்ளைகளிடம் திணித்து டாக்டராக, எஞ்சினியராக, கலெக்டராக ஆகவேண்டுமென வற்புறுத்தாதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களை விடவும் பெருங்கனவுகளோடு இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அதிகாரம் செய்யக்கூடாது. அவர்க ளை உலகிற்கு வர வைப்பதற்கான கருவி மட்டுமே நீங்கள். அவர்கள் வாழ்க்கையை அவர்கள்தான் வாழ்ந்தாக வேண்டும். குழந்தை களை கொஞ்சுங்கள், கொண்டா டுங்கள். அழகிய படங்களோடு கூடிய கதைப்புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். அவர்களா கவே இந்த உலகத்தை எதிர்கொள் ளும் ஆற்றலோடு தயாராவார்கள். இவ்வாறு அவர் பேசினார். விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, துணை முதல்வர் குமாரவேல், ரோட்டரி சங்கத் தலைவர் மகாத்மா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.