tamilnadu

img

புதுகை காய்கறி மார்க்கெட் சங்கு மீண்டும் ஒலிக்குமா?

புதுக்கோட்டை, ஏப்.22-புதுக்கோட்டை காய்கறி மார்க்கெட் பகுதியில் பொதுமக்களுக்கு நேரத்தை தெரிவிக்கும் சங்கு கடந்த பல ஆண்டுகளாக உள்ளது. தினமும் காலை 5 மணி, பகல் 12 மணி, மதியம் 2 மணி, மாலை 5 மணி, இரவு 8 மணி ஆகிய நேரங்களிலும், ரம்ஜான் பண்டிகை நோன்பு நேரங்களில் அதிகாலை 3 மணிக்கும் ஒலிக்கும். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள இந்த சங்கு கடந்த சில மாதங்களாக ஒலிப்பதில்லை. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, நேரத்தை பார்ப்பதற்கு பல்வேறு வசதிகள் இருந்தாலும், இயந்திரகதியாக தங்களை மறந்து வேலை பார்க்கும் எங்களுக்கு சங்கொலியின் எச்சரிக்கை நேர நிர்வாகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக பழுதுபார்த்து மீண்டும் சங்கு ஒலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்தனர்.

;