வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், 31 பேரின் டி.என்.ஏ-வும் ஒத்துப்போகவில்லை என தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டிய லினக் குடியிருப்பின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முதல் கட்டமாக, வேங்கைவயல், இறையூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31 பேரிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், 31 பேரின் டி.என்.ஏ-வும் ஒத்துப்போகவில்லை என தெரியவந்துள்ளது.
அடுத்தபடியாக 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கோரி உள்ளனர். வேங்கைவயல் சம்பவ நடந்து ஓராண்டாகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.