tamilnadu

img

பொன்னமராவதி கலவரத்திற்கு காரணமான ஆடியோ இருவர் கைது


பொன்னமராவதி கலவரத்திற்கு காரணமாக ஆடியோவை வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த மக்கள், தங்கள் சமூகத்தை மாற்று சமூகத்தைச் சோ்ந்த சிலா் இழிவாக பேசிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனா். மேலும் இது தொடா்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடக்கியைத் தொடா்ந்து பொன்னமராவதியில் காவல்துறை வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில் இந்த கலவரத்தில் தொடர்புடைய செல்வக்குமார் வசந்த் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வசந்த், கரிசல் காட்டைச் சேர்ந்த செல்வக்குமார் ஆகியோர் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சிங்கப்பூரில் இருந்த செல்வக்குமார் ஆடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். ஆடியோவை வெளியிட வசந்த உதவியது தெரியவந்துள்ளது.