tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, அக்.3- 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், அரசு  போக்குவரத்து கழகங்க ளின் வரவுக்கும் செல வுக்கும் இடைப்பட்ட தொகை யை அரசே வழங்க வேண்டும், 2003-க்கு பிறகு  பணியில் சேர்ந்த தொழிலா ளர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணி மனை முன்பு தொமுச மத்திய  சங்க தலைவர் அடைக்கண் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச கிளைச் செயலா ளர் முத்தையா, சிஐடியு கிளைச் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம், பணி யாளர் சங்க பொதுச் செய லாளர் ராஜசேகர், ஏஐ டியுசி மத்திய சங்க தலை வர் ராஜேந்திரன், அறிஞர் அம்பேத்கர் தொழிலாளர் முன்னணி பொதுச் செயலா ளர் நாகராஜன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சிவஞானம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
கும்பகோணம்
கும்பகோணம் போக்குவரத்துக் கழக தலை மை அலுவலகம் முன்பு  தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க துணைத்தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செய லாளர் மணிமாறன், கவுரவத் தலைவர் ஆர்.மனோகரன் விளக்க உரையாற்றினார். துணைத் தலைவர் வெங்கடாசலபதி, துணை செயலாளர் ராஜகுமார், மகேந்திரன், அழகிரிசாமி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் பகத்சிங் உள்ளி ட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.