tamilnadu

img

வருவாய் ஆய்வாளர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி போராட்டம்

பொன்னமராவதி, ஜூன் 24- புதுக்கோட்டை பொன்னமராவ தியில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட கிளை சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டம் நடைபெற்றது.  திருச்சி தொட்டியம் வட்டம் வரு வாய் ஆய்வாளர் சேகர் கொரோனா நிவாரணப் பணியின் போது விபத்தில் மரணமடைந்தது தொடர்பாக இழப்பீடு தொகை ரூ.50 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத் திற்கு வட்ட தலைவர் துரை தலை மை வகித்தார். தனி வட்டாட்சியர் சங்கர காமேஸ்வரன், துணை வட் டாட்சியர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;