புதுக்கோட்டை, செப்.9- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாத்தம்பட்டி ரெங்க சமுத்திரம் கிராமத்தை குழந்தைசாமி மகன் ஹெவின் ஆரோ (15). கே.ராசிய மங்கலம் கிராமத்தில் உள்ள தனி யார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வரு கிறார். அதே பள்ளியில் அந்த மாணவ னின் தாயாரும் ஆசிரியையாக உள்ளார். 10-ம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடப்பதால் வழக்கமாக காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு 3 ம் நம்பர் நகரப் பேருந்து மூலம் ஆலங்குடி வந்து அங்கி ருந்து பள்ளிக்கு செல்வது வழக்கம். சில நேரங்களில் பேருந்து வர தாமதம் ஏற்பட்டால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோரிடம் லிப்ட் கேட்டு செல்வதும் மாண வனின் வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற மாண வன் பள்ளிக்குச் செல்லவில்லை. மாணவன் ஹெவின் ஆரோ பள்ளிக்கு வரவில்லை என்று வகுப்பாசிரியர் மாண வனின் தாயாரான ஆசிரியைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு ஆலங்குடி காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். தொடர்ந்து ஆலங்குடி புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்து மாணவனை தேடி வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவன் காணாமல் போய் இருப்பது ஆசிரியர், மணாவர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. இகுறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.