tamilnadu

தொடரும் சிவப்பு புத்தகம் வாசிப்பு இயக்கம்

புதுக்கோட்டை, மார்ச் 12- புதுக்கோட்டை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசிப்பு இயக்கம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிகப்பு புத்தகத் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்.21 முதல் புதுக்கோ ட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட த்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.  அதனொரு பகுதியாக வியாழக்கிழமை கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் நம்ப ன்பட்டி கிளை சார்பில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.  வாசிப்பு இயக்கத்தை மாநில க்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் வி.துரைச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மதி, சக்திவேல், சுந்தரக்கண்ணு உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.

;