புதுக்கோட்டை, மார்ச் 3- நிர்வாகத்தின் தொடர் தோல்விகளை மறைக்கவே மதப்பிரச்சனைகளை கையில் எடுத்து மக்களை பதற்றத்துக்கு உள்ளாக்கு கிறது மோடி அரசு என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் புதுக் கோட்டை மாவட்டம் அரி மளத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் பேசியது: மத்திய அரசு சமையல் கேஸ் விலையை கடுமை யாக உயர்த்தி உள்ளது. ஆயி ரம் ரூபாயை நெருங்கி விட்டது. ஏழை மக்களுக்கான மானியத்தை தொடர்ந்து வெட்டிச் சுருக்குகிற மத்திய அரசு பெருமுதலாளிகளுக்கு அள்ளி, அள்ளிக் கொடுக்கி றது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை யின்மை அதிகரித்துள்ளது. குஜராத் மாடல் எனச் சொல்லி மத்தியில் ஆட்சிக்கு வந்தனர். அதே குஜராத்து க்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்த போது குடிசை களை மறைத்து சுவர் எழுப்புகின்றனர். அதிமுக வும், பாமகவும் ஆதரிக்கா மல் இருந்தால் மாநிலங்க ளவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறி இருக்காது. நாட்டு மக்களை பதற்றத்துக்கு உள்ளாக்கியதில் இவர்க ளுக்கும் பங்கு உண்டு. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசா யத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலையும் செய்ய வில்லை என்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால் எல்லாத் தொழிலையும் பினாமி பெயரில் நடத்து கிறேன் என்பது தான். குடி யுரிமைச் சட்டத் திருத்தத்தி ற்கு எதிரான போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் பின்னால் இருந்து இயக்குவதாக பிரதமர் மோடி கூறினார். நாங்கள் பின்னால் இருந்து இயக்கவில்லை. முன்வரி சையில் நிற்கிறோம் என்றார் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி. மத்திய அரசு அனைத்துத் துறையிலும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரு கிறது. இது வெளிச்சத்துக்கு வந்தால் ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பார்கள் எனப் பயந்து தான் மதப் பிரச்சினைகளை கிளறி விடுகிறது மோடி அரசு. குடி யுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்து வதிலிருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்று அமித்ஷா சொன்ன அதே வேளையில் சட்டத்தை ஒரு இஞ்ச் கூட அமல் படுத்த மாட்டோம் என்றார் கேரள முதல்வர் பிரனாயி விஜயன். மதவெறியர்கள் திட்ட மிட்டு உருவாக்கிய கல வரத்தில் 47 பேர் உயிரி ழந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட 6 இஸ்லாமி யர்களை உயிரைப் பணயம் வைத்து மீட்டுள்ளார் பிரேம்சந் என்ற இந்து. இந்த ஒற்றுமையை சீரழித்து நாட்டை துண்டாடும் நடவ டிக்கையில் மோடி- அமித்ஷா கூட்டணி ஈடுபட்டு வருகிறது. இதை நாட்டு மக்கள் உறுதியாக முறிய டிப்பர். இந்தப் போராட்டக் களத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முன்னணியில் நிற்கும். இவ்வாறு மதுக்கூர் ராமலிங்கம் பேசினார். பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.அடைக் கப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், எஸ்.பொன்னுச்சாமி, ஒன்றி யச் செயலாளர் ஜி.நாகரா ஜன், மாவட்டக்குழு உறுப்பி னர் சி.ஜீவானந்தம், மூத்த தோழர் ஆர்.வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் பேசினர்.