tamilnadu

img

செவிலியர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது

புதுக்கோட்டை, மே 14- செவிலியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு எக்காலத்திலும் போற்றுதலுக்குரியது என்றார் புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி. செவிலியர் தினத்தை முன்னிட்டு ஆட்சி யர் பி.உமாமகேஸ்வரி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்க ளுக்கு பூங்கொத்துக்கள் மற்றும் பழங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.  பின்னர் அவர் தெரிவிக்கையில், செவிலியர்களின் பணி எக்காலத்திலும் போற்றுதலுக்குரியது என்பதற்கு எடுத்துக் காட்டாக உலகமெங்கும் கொரோனா தொற்று பரவியி ருக்கும் இக்காலக்கட்டத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன்  ஒவ்வொரு செவிலியரும் இரவு, பகல் பார்க்காமல் நோயாளி களின் அருகில் இருந்து அவர்களை குணமடைய செய்து வருகின்றனர். செவிலியர்கள் நோயாளிகளிடம்  அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருவது என்றென்றும் மதிப்பிற்கும், போற்றுதலுக்கும் உரியது என்றார்.  மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம், கண்காணிப்பு அலுவலர் இந்திராணி, துணை கண்காணிப்பு அலுவலர் ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.