புதுக்கோட்டை, பிப்.18- புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு மாணவர்கள், வாசகர்களின் படையெடுப்பால் நாளுக்கு நாள் திணறி வருகிறது புதுக் கோட்டை புத்தகத் திருவிழா. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நான்காவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா கடந்த பிப்ரவரி 14 முதல் புதுக்கோட்டை நகர்மன் றத்தில் நடைபெற்று வருகிறது. துவக்க நாள் முதலே களைகட்டத் தொடங்கிய புத்தகத் திரு விழாவிற்கான வருகை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமையன்று பள்ளி, கல்லூரி மாணவர்களின் படையெ டுப்பால் புதுக்கோட்டை நகரமே விழாக்கோ லம் பூண்டது. சூரியூர், அரையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள், ஆலங்குடி, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகள் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப் பள்ளி, ஸ்ரீபாரதி கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து இரண்டாயி ரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமையன்று புத்தகத் திருவிழா வில் குவிந்தனர். மாணவர்களின் படையெ டுப்பால் நீண்ட வரிசையில் நின்று அவர்கள் புத்தகச் சந்தையை பார்வையிடும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக விண்வெளி அற்புதத்தை விளக்கும் கோளரங்கம் மற்றும் தமிழரின் பண்பாட்டை விளக்கும் கீழடி அரங்கம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட அவர்கள் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற் பட்டது. கூட்டத்தை சமாளிக்கும் விதமாக மாண வர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனை கள், விழிப்புணர்வு கதைப்பாடல்கள், அறி வியல் விளையாட்டுக்கள், நாணயவியல் கண்காட்சி அரங்குகள் என மாணவர்களை பல பகுதிகளாகப் பிரித்து, பிறகு புத்தக கண் காட்சிக்குள் நுழையும் வகையில் அறிவியல் இயக்கத்தினர் ஒழுங்குபடுத்தினர்.
ஒவ்வொரு மாணவர் கையிலும் புத்தகங்கள்
கடந்த வருடங்களில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் மாணவர்களில் பெரும்பகுதி யினர் வெறும் பார்வையாளர்களாகவே வந்து சென்றனர். இதனால், காலை நேரத்தில் மாண வர்களின் வருகையால் புத்தக விற்பனை குறை வாகவும், மாலை நேரத்தில் வாசகர்களின் வருகையால் அதிகமாவும் இருப்பதாகவும் இருந்தது. ஆனால், இந்த வருடம் 90 சதவிகி தத்திற்கும் அதிகமான மாணவர்கள் குறைந் தது ஒரு புத்தகத்தையாவது வாங்கிச் செல் கின்றனர். மாணவர்களின் இந்த ஆர்வத்தைப் பாராட்டி அவர்களுக்கு அதிகமான கழிவுகளில் புத்தகங்களை விற்பனை செய்வதாக பதிப்ப கத்தினர் தெரிவிக்கின்றனர்.
புத்தகங்கள் பரிசளிப்பு
மேலும், மாணவர்களின் ஆர்வத்தை பாராட்டும் வகையில் கல்வியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலர் தங்கள் பகுதிக ளில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஏராள மான புத்தகங்களை வாங்கி பரிசளித்து வரு கின்றனர். இதை மிகப்பெரிய சமூக மாற்றத் திற்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளதாக விழாக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
நூல்கள் வெளியீடு
செவ்வாய்க்கிழமை மாலையில் நடை பெற்ற கருத்தரங்கிற்கு வயி.ச.வெங்கடாசலம் தலைமை வகித்தார். பொறியாளர் சிவ.அன்பு இளங்கோ, கலைஞர் தமிழ்ச்சங்க நிறுவனர் த.சந்திரசேகரன், திரைப்படப்பாடலாசிரியர் இரா.தனிக்கொடி ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டனர். அரசு கல்வியி யல் கல்லூரி முதல்வர் ஆர்.குணசேகரன், தமிழக தொல்லியல் கழகச் செயலாளர் க.ராஜ வேலு, கவிஞர் ரமா ராமநாதன், அறிவொளி முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வி.மகேஸ் வரி, கவிஞர் சோலச்சி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் கலந்துகொண்டு வம்பன் செபா எழுதிய ‘சுளீர்’ கவிதைத் தொகுப்பை வெளி யிட்டு கவிச்சுடர் கவிதைப்பித்தன், சாமி கிரிஷ் எழுதிய ‘பட்டாம் பூச்சியின் புகைப்பட ப்ரியங் கள்’ என்ற கவிதை நூலை வெளியிட்டு திரைப் படப் பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். நூல்களின் முதல் பிரதிகளை நா.முத்துநிலவன், சு.மதியழகன், மு.முத்துக் குமார், மு.கீதா ஆகியோர் பெற்றுக்கொண்ட னர். முன்னதாக புதுகை புதல்வன் வரவேற்க, ஏ.ராஜேந்திரன் நன்றி கூறினார்.