புதுக்கோட்டை, நவ.16- கடந்த ஆண்டு வீசிய கஜா புயல் நிவாரணப் பணிகளை முறையாக மேற்கொள்ளாத தமிழக அரசைக் கண்டித்தும், மீண்டும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் புதுக் கோட்டை மாவட்டம் ஆலங் குடியில் அனைத்துக் கட்சி யின் சார்பில் சனிக்கிழமை யன்று பேரணி- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆலங்குடி சந்தைப்பேட் டையிலிருந்து தொடங்கிய பேரணிக்கு சட்டமன்ற உறுப் பினர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை வகித்தார். திமுக ஒன்றியச் செயலாளர் கே.பி.கே.டி.தங்கமணி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், சிபிஐ ஒன்றியச் செயலாளர் சொர்ணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த ஒன்றி யப் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். பேரணியில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.