tamilnadu

‘சிறு வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

பொன்னமராவதி, ஆக.26- பொன்னமராவதியில் தரைக்கடை சிறு  வியாபாரிகள், சிறு விவசாயிகள் அத்தியா வசிய பொருளான காய்கறிகளை சந்தை வீதி  சாலையில் தனிமனித இடைவெளியுடன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டியும், காய்கறி உள்ளிட்ட வியாபாரப் பொரு ட்கள் மீது மருந்துகளை அடித்து வியாபாரம்  செய்ய விடாமல் தடுக்கும் பேரூராட்சி நிர்வா கத்தை கண்டித்தும் சிறு வியாபாரிகள், விவசா யிகள் சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.பக்ரு தீன், ஒன்றிய குழு உறுப்பினர் கே.குமார் உள்ளிட்டோருடன் பொன்னமராவதி பேரூ ராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோரிக்கை மனுவை பெற்றுக் கொள்ள மறுத்த செயல் அலுவலரை கண்டித்து காவல்  நிலையம் முன்பு சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தலை யிட்டு வட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர். மேலும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்  கொண்ட வட்டாட்சியர் திருநாவுக்கரசு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை அடுத்து வியாபாரிகள் தற்காலிகமாக போரா ட்டத்தை ஒத்திவைத்தனர். சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடும் சிபிஎம் ஒன்றிய தலை வர்கள் மீது  அவதூறான கருத்துக்களை சமூக  வலைதளங்கள் மூலம் பரப்பிவரும் பொன்ன மராவதி பேரூராட்சி செயல் அலுவலர் தனு ஷ்கோடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் ஒன்றியக் குழு வலி யுறுத்தியுள்ளது.