புதுக்கோட்டை, அக்.16- பாலியல் வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ரமணி என்ற ரமணி நாதன்(34). இவர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு அறந்தாங்கி காவல் நிலையத்தினர் கைது செய்த னர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ரமணிநாதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜெயலட்சுமி புதன்கிழமையன்று தீர்ப்பளித்தார்.