tamilnadu

img

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கம்

புதுக்கோட்டை,பிப்.5- புதுக்கோட்டையில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கிராம அறிவு மையங்களைச் செயல்படுத்துவதில் உள்ளாட்சி பிரதி நிதிகளின் பங்கு தொடர்பான கருத்த ரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு அரிமளம் ஊராட்சி ஒன்றிய ஒன்றி யக்குழுத் தலைவர் மேகலாமுத்து தலைமை வகித்தார்.  கன்னியாகுமரி மாவட்டம், தோ வாளை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் எம்.ஏசுதாஸ் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் கவிஞர் தங்கம்மூர்த்தி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற வர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு ரையாற்றினார். அவர் பேசும்போது, இந்த கருத்தரங்கு உள்ளாட்சி பிரதிநிதி களின் செயல்பாட்டை ஊக்கப்படுத்து வதாக அமையும். எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவனம் உங்க ளோடு இனைந்து செயல் படுவது மற்ற ஊராட்சிகளுக்கு கிடைக்காத ஒரு அறிய வாய்ப்பு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும். நாம் வாழும் இந்த மண்ணை ஒரு படியா வது உயர்த்த வேண்டும் என்ற எண் ணத்தில் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி  நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் கருத்தரங்கின் நோக் கங்களையும் அறிவு மைய செயல்பாடு களை மேம்படுத்துவதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மேற்கொள்ளவேண்டிய செயல்பாடுகள் குறித்தும் விளக்கி பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத்தலை வர் எம்.வீரமுத்து வாழ்த்துரை வழங்கி னார். முன்னதாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள ஒருங்கி ணைப்பாளர் டி.விமலா அனைவரையும் வரவேற்றார். திட்ட இணை அலுவலர் காஸ்.பிரிட்டோ நன்றி கூறினார்.